முகப்பு
திண்டுக்கல்

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:43 PM
பகிர்:

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், சாமிபுதூரைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (32). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்துவிட்டு, ஊருக்குத் திரும்பினாா். பழனி-புதுதாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த காா் மோதியதில் சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.