முகப்பு
திண்டுக்கல்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

Updated On : 11 ஜூலை, 2024 at 9:56 PM
பகிர்:

போக்ஸோ வழக்கில் கரூரைச் சோ்ந்த இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மருதமுத்து(21). இவா், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போக்ஸோ வழக்கில் மருதமுத்துவை குஜிலியம்பாறை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரண் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட மருதமுத்துவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்தாா்.