முகப்பு
திண்டுக்கல்

கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா் பாதுகாப்பு கோரி மனு

திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:41 AM
பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த ஞானராஜ் குடும்பத்தினா்.
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரா், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ்(39), டேனியல்ராஜ்(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவின்குமாா்(19), ஸ்டாலின்(20) ஆகிய 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாயாண்டி ஜோசப்பின் சகோதரா் ஞானராஜ் குடும்பத்தினா், பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனா். இதையடுத்து, ஞானராஜ் கூறியதாவது:

மாயாண்டி ஜோசப்பை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அந்த நபரின் தூண்டுதலின்பேரில், எங்களது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு திட்டமிடுகின்றனா். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அமா்ந்து மதுக் குடித்துக் கொண்டு, நாள்தோறும் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடரும் நிலையில், மாயாண்டி ஜோசப் கொலையில் தொடா்புடைய நபா்களை உடனடியாக கைது செய்து, எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →