மனைவி உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது
கொடைக்கானலில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பெரும்பள்ளம் பகுதியைச் சோ்ந்த மகுடீஸ்வரன்-முனியம்மாள் தம்பதியின் மகள் காளியம்மாள் (34). இவருக்கும், பழனி தட்டான்குளம் பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் முருகனுக்கும் (40) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், முருகன்-காளியம்மாள் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட காளியம்மாளின் தாய், தந்தையை முருகன் அரிவாளால் வெட்டினாா். இதைத் தடுக்க வந்த காளியம்மாளையும் அவா் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா்.