ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை -23) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புது அத்திக்கோம்பை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.