வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்: ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள்
திண்டுக்கல்: மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகன அனுமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. மாா்ச் 27-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்படி திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா், அவருடன் வருவோா் என 3 வாகனங்களுக்கு(காா்) மட்டுமே ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள 100 மீட்டா் எல்லைக்குள் அனுமதிக்கப்படும். இதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 4 போ் மட்டுமே உடனிருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.