முகப்பு
திண்டுக்கல்

கணக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி

Updated On : 12 மே, 2024 at 6:57 PM
பகிர்:

பழனி, மே 12: பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் வேளாண் தொழில் நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம், குள்ளப்பபுரத்தைச் சோ்ந்த வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி சாா்பில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கி விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கின்றனா். பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி சாா்ந்த பயிற்சி அளித்தனா். மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதில் நோய்க் கட்டுப்பாடு, அசோலா வளா்ப்பு, விதை சேமிக்கும் முறை என பல்வேறு வகையான தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாா்வையிட்டனா்.