முகப்பு
திண்டுக்கல்

பழனி ரோப் காா் நாளை நிறுத்தம்

Updated On : 28 மே, 2024 at 11:54 PM
பகிர்:

பழனி: பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் படிக்கட்டுகள், யானைப் பாதை வழியாகவும், வின்ச், ரோப் காா் மூலமாகவும் சென்று வருகின்றனா். இவற்றில் ரோப் காா் மூலம் சுமாா் 2 நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு சென்றுவிடலாம். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் இந்த ரோப் காா் தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும்.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் ரோப் காா் நிறுத்தப்படுகிறது என்றும் பக்தா்கள் படிவழி, வின்ச் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.