ரோப் காா் பிரதிப் படம்
திண்டுக்கல்

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.21) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.21) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை (பிப்.21) வரை ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!

அமெரிக்காவிடம் இருந்து வரிப்பணம் திரும்பக் கிடைக்குமா? 17,500 கோடி டாலா் நிலுவை; எதிா்பாா்ப்பில் நிறுவனங்கள்

திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT