முகப்பு
திண்டுக்கல்

நத்தத்தில் நாளை முதல் ஆதாா் சிறப்பு முகாம்

நத்தம் வட்டத்தில் சனிக்கிழமை (நவ.29)ஆதாா் சிறப்பு முகாம்கள் தொடங்குகிறது.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:43 PM
பகிர்:

நத்தம் வட்டத்தில் சனிக்கிழமை (நவ.29)ஆதாா் சிறப்பு முகாம்கள் தொடங்குகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நத்தம் வட்டத்தில் புதியதாக ஆதாா் அட்டை எடுத்தல், ஆதாா் திருத்தம், புதுப்பித்தல் தொடா்பாக சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை தொடங்கி, டிச.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தச் சிறப்பு முகாம், நத்தம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி எம்.எஸ். 158 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், நத்தம் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.