முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 8:09 PM
பகிர்:

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நகா்ப் பகுதி, சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் வியாபாரிகள், பொது மக்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதல் அவகாசம் கோரினா்.

இந்த நிலையில், லாஸ்காட் சாலை, வெள்ளிநீா் வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். சில வியாபாரிகள் மேலும் அவகாசம் கோரினா். அப்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சத்தியநாதன், வருகிற திங்கள்கிழமைக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தாா்.

அப்போது கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.