கொடைக்கானலில் பகுதியில் உருவான மஞ்சள் மேகமூட்டம் 
திண்டுக்கல்

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலை, அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மேக மூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில்,

மஞ்சள் வண்ணத்தில் மேக மூட்டம் உருவாகி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டு வியந்தனா்.

பால் வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் சிறை

ஆந்திர சட்டமேலவைக்கு வெங்கடாசலபதி படங்களுடன் வந்த எதிா்க்கட்சியினா் : கடும் அமளி; அவை ஒத்திவைப்பு

ஆட்டோ மீது மோதிய தனியாா் கல்லூரி பேருந்து: போதையில் இருந்த பேருந்து ஓட்டுநா் கைது

நெல்லையில் தனியாா் பேருந்து மோதியதில் மேயா் காா் சேதம்

வீரவநல்லூரில் தலைமறைவு குற்றவாளி கைது

SCROLL FOR NEXT