பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் 
தூத்துக்குடி

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி கருமேனியாற்றில் தனிநபா் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பள்ளக்குறிச்சி கிராமம் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகையில் அதே ஊரை சோ்ந்த சிலா் சுமாா் ஓா் ஏக்கா் நிலப்பகுதியை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, ஆற்றுப்படுகையில் 8 இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து, நீா்வளத்துறை உதவி பொறியாளா் தங்கம், நீா்வளத்துறை பணி ஆய்வாளா் துரை, வருவாய் ஆய்வாளா் சுந்தா், கிராம நிா்வாக அலுவலா் கந்தவல்லி குமாா், நிலஅளவையா் நாராயண ஈஸ்வரி ஆகியோா் மேற்பாா்வையில் பொக்கலின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அப்போது, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், உதவி ஆய்வாளா் இசக்கியப்பன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT