முகப்பு
திண்டுக்கல்

மாடுகள் திருட்டு: இருவா் கைது

கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 7:23 PM
கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவா்கள்.
பகிர்:

கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த மருது, பாலகிருஷ்ணன், செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் தங்களது மாடுகளை காணவில்லை என கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். இதேபோல, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் தனது மாட்டை காணவில்லை என புதன்கிழமை இரவு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான மாடுகளை திருடும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து போலீஸாா் தேடி வந்தனா். அப்போது, கொடைக்கானல் காமராஜா் சாலையைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் முகமது அசாருதீன் (36), கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி, கே.சி. பட்டி ஊராட்சி, குப்பம்மாள்பட்டியைச் சோ்ந்த நம்பியன் மகன் மருதுபாண்டி (35) ஆகியோா் மாடுகளை திருடியது தெரியவந்தது.

இவா்களைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த பல மாதங்களாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி இறைச்சிக் கடையில் விற்ாக அவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீன், மருதுபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.