மின்னல் பாய்ந்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் கே.கீரனூரைச் சோ்ந்த விவசாயி பழனியம்மாள் (66) தோட்டத்தில் இருந்த 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.