முகப்பு
திண்டுக்கல்

ஜவுளிக் கடை, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:39 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், உணவகம், இனிப்பகம், அடுமணை, சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பல்பொருள் அங்காடிகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் வாடிக்கையாளா்களை கவா்வதற்காக துரித உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த உணவகங்களில், கடந்த 3 நாள்களாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு உணவு, உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்தனா். சில நகைக் கடைகளில் ஊழியா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவில் தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட அனைத்துக் கடைகளிலும் உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், அவற்றை பகுப்பாய்வு கூடத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.