மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து சேதம்
கொடைரோடு அருகே பலத்த மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்தது.
கொடைரோடு அருகே பலத்த மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்தது.
நிலக்கோட்டை அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் கிராமத்தில் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் சண்முகம், இவரது மனைவி ராணி வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் சண்முகம் குடியிருந்த வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து ராணி கூறியதாவது: இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சிமெண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதன் பிறகு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால், தற்போது அனைத்து வீடுகள் சேதமடைந்துள்ளன.
எனவே, தமிழக அரசு சேதமடைந்த வீட்டை பராமரிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.