முகப்பு
திண்டுக்கல்

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

நிலக்கோட்டையை அடுத்த பாண்டியராஜபுரத்தில் இயற்கை வேளாண்மையை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 6:45 PM
பகிர்:

நிலக்கோட்டையை அடுத்த பாண்டியராஜபுரத்தில் இயற்கை வேளாண்மையை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், கரூா், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு வைகை அறக்கட்டளை இயக்குநா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். கரூா், ஈரோடு விவசாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் இளங்கோவன், ஒருங்கிணைப்பாளா் விசாலினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், இதைப் பயன்படுத்தும் முறைகள், இதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்புழு உரம் தயாரிப்பு தொழிற்சாலை உரிமையாளா் பழனிசாமி, பணியாளா்கள், கரூா், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், தன்னாா்வளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இயற்கை மண்புழு உரத் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளா் சதா வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →