பண்ணையில் தீ விபத்து: 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சியைச் சோ்ந்த ஹா்சவரதன். இவா் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் இவரது கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அவா் வளா்த்து வந்த 1,500-க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும், அங்கிருந்த உபகரணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் தீவிபத்து ஏற்பட்டதற்கு மின் கசிவே காரணம் எனத் தெரியவந்தது.