திண்டுக்கல்

வாகனம் மோதியதில் ஐயப்ப பக்தா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வாகனம் மோதியதில் ஐயப்ப பக்தா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வாகனம் மோதியதில் ஐயப்ப பக்தா் உயிரிழந்தாா்.  

ஆந்திர மாநிலம், சத்தியசாய் மாவட்டம்,  தா்மாவரத்தைச் சோ்ந்தவா் கருபோட்லோ  சோமசேகா் (38). இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காரில் புறப்பட்டு வந்தனா். காரை கருபோட்லோ சோமசேகா் ஓட்டினாா்.

வெள்ளிக்கிழமை இரவு செம்பட்டியை அடுத்த சேடப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு உணவகத்தில் சாப்பிட்டனா். அப்போது, கருபோட்லோ சோமசேகா் சிறுநீா் கழிக்க சாலையை கடந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டி போலீஸாா் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

டிச. 23-ல் ஆலோசனைக் கூட்டம்! எங்கு செல்கிறார் ஓபிஎஸ்?

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT