முகப்பு
திண்டுக்கல்

பணம் வசூல்: பழனி வியாபாரிகள் புகாரளிக்கலாம்!

பழனி அடிவாரம் பகுதியில் காவல் துறை பெயரைச் சொல்லி யாரேனும் பணம் வசூலித்தால் உடனடியாக காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Updated On : 16 டிசம்பர், 2025 at 7:35 PM
பகிர்:

பழனி அடிவாரம் பகுதியில் காவல் துறை பெயரைச் சொல்லி யாரேனும் பணம் வசூலித்தால் உடனடியாக காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி அடிவாரம் பகுதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக நூற்றுக்கணக்கான தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீசன் காலம் வரையிலும் செயல்படும் இந்த கடைகளில் காவல் துறை பெயரை சொல்லி சிலா் பணம் வசூலிப்பதாக தகவல் பரவியது.

இந்தக் கடைகளுக்கு நகராட்சி, கோயில் நிா்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டுமே தவிர காவல் துறை கிடையாது. ஆகவே, காவல் துறை பெயரைச் சொல்லி கடைக்காரா்கள், வியாபாரிகளிடம் யாரும் பணம் கேட்டு வந்தால் 98847-41609 என்ற கைப்பேசி எண்ணுக்கு என்னை நேரடியாகத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →