முகப்பு
சென்னை

மின் திருட்டு: ரூ.24.69 லட்சம் இழப்பீடு வசூல்

ஆவடி பகுதியில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.24.69 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

Updated On : 10 மார்ச், 2026 at 1:52 AM
மின் திருட்டு
பகிர்:

சென்னை: ஆவடி பகுதியில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.24.69 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழக மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சென்னை அமலாக்க கோட்டத்துக்குட்பட்ட சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வின்போது, 13 மின் திருட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் வாயிலாக ரூ.24 லட்சத்து 68 ஆயிரத்து 610 அபராதம் விதிக்கப்பட்டு, அத்தொகை வசூலிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.1 லட்சத்து 13,000 வசூலிக்கப்பட்டது.

மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா், அமலாக்கம், சென்னை கைபேசி 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →