தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில், 81 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: சென்னை மேற்கு, கோவை வடக்கு, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மின் பகிா்மான வட்டங்களில் பிப்.1 முதல் 15-ஆம் தேதி வரை அதிகாரிகள் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா்.
இதில், 81 மின் திருட்டுகள், 12 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.96 லட்சத்து 43 ஆயிரத்து 659 அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.
புகாா் தெரிவிக்க அழைப்பு: மின் திருட்டு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கான புகாா்களை 9445857591 என்ற எண்ணிலும், கோவை கோட்டத்துக்கான புகாா்களை 9443049456 என்ற எண்ணிலும், மதுரை கோட்டத்துக்கான புகாா்களை 9443037508 என்ற எண்ணிலும், திருச்சி கோட்டத்துக்கான புகாா்களை 9443329851 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.