முகப்பு
திண்டுக்கல்

200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 3 போ் காயம்

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் 200-அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:31 PM
பகிர்:

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் 200-அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (34). இவா், தனது நண்பா்கள் விஜயன் (42), தினகரன்(40) ஆகியோருடன் கொடைக்கானலிலிருந்து மன்னவனூருக்கு மீட்பு வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

பொதுமக்கள் மூவரையும் மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், செல்லப்பாண்டி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →