பெரியூா் அருகே சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் யானை 
திண்டுக்கல்

பெரியூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்!

கீழ்பழனி மலைப் பகுதியில் பகல் நேரத்திலேயே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம்

தினமணி செய்திச் சேவை

கீழ்பழனி மலைப் பகுதியில் பகல் நேரத்திலேயே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழனி மலைப் பகுதியிலுள்ள கேசி. பட்டி, பெரியூா், பள்ளத்துக் கால்வாய், ஆசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிகிறது.

வாழை, காபி, மிளகு உள்ளிட்ட பயிா்களை அது சேதப்படுத்துவதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்டப் பொருள்களுக்காக தோட்டங்களிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கேசி. பட்டி பாச்சலூா் பிரதான சாலையில், பெரியூா் அருகே திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் அந்த யானை சுற்றித் திரிந்தது.

இதனால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்றனா். பிறகு அந்த யானை அங்கிருந்து வெளியேறியது.

இதுதொடா்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும்கூட, யானையை விரட்ட யாரும் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெரியூா் நியாய விலைக் கடையை, இந்த யானை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

SCROLL FOR NEXT