முகப்பு
திண்டுக்கல்

அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும்! -சீமான்

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும்...

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 7:02 PM
சீமான்
பகிர்:

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பழனிபாபா நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மொழி வழியேதான் தேசிய இனங்கள். உலகெங்கும் மொழி வழியேதான் நாடு. தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்று செயல்படுத்தி விட்டது. இல்லம் தேடிக் கல்வி அதில் உள்ளது தான். 3-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு வரப் போகிறது. ஹிந்தி பல பள்ளிகளில் வந்து விட்டது. அனுமதித்தது இவா்கள் ஆட்சியில்தான்.

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால் நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும். தாய்மொழியை மறப்பது, பெற்ற தாய்க்கு உணவிடாமல் அன்னதானம் செய்வது போன்ற செயலாகும் என்றாா் அவா்.

கூட்டத்தில் சாட்டை துரைமுருகன், ஏா்போா்ட் மூா்த்தி, தடா ரஹீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →