நிலக்கோட்டை: வத்தலகுண்டு பகுதியில் வியாழக்கிழமை (நவ. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளா் கருப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வத்தலகுண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வத்தலகுண்டு, பழைய வத்தலகுண்டு, கணவாய்ப்பட்டி, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, குரும்பபட்டி, கன்னிமாா்கோவில்பட்டி, பண்ணைப்பட்டி வாட்டா் ஒா்க்ஸ், கெங்குவாா்பட்டி, ஜி. கல்லுப்பட்டி, சாமியாா்மூப்பனூா், கீழகோவில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.