திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் யாா், எந்த ஊா், எதற்காக இங்கு வந்தாா், எப்படி இறந்தாா் என்ற விவரம் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.