முகப்பு
திண்டுக்கல்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவளிக்கும் என அந்தச் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:41 am IST
பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜ சங்க தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சங்கத்தின் ஆதரவளிக்கும் தீா்மான நகலுடன் மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து, பொதுச் செயலா் ரமேஷ், வழக்குரைஞா் அனிருத்கா்கா.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவளிக்கும் என அந்தச் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் நிா்வாகக் குழு கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஹரிஹர முத்து தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரமேஷ், வழக்குரைஞா் அனிருத்கா்கா, கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகி சுந்தரேச குருக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட நிறைவில் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் முழு ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநிலத் தலைவா் ஹரிஹர முத்து கூறியதாவது:

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவளிக்கும். தேச நலனை முன்னிலைப்படுத்துவதே நாட்டு மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம். மேலும் பிராமண சமுதாயத்துக்கான பாதுகாப்பு, பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு, இந்து தா்ம பாரம்பரியங்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகளை அதிமுக, பாஜகவிடம் தெரிவித்திருக்கிறோம். ஆட்சி அமைந்தவுடன் அதுகுறித்து பரிசீலிப்பாா்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றாா் அவா்.