முகப்பு
திண்டுக்கல்

கல்லால் தாக்கி முதியவா் கொலை

பழனியில் கல்லால் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:54 PM
கொலை - சித்திரிப்பு
பகிர்:

பழனியில் கல்லால் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தாா்.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (70). இவா் இந்தப் பகுதியில் ஏதாவது இடத்தில் அமா்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவாராம். தடந்த 5-ஆம் தேதி ரத வீதியில் நின்று கொண்டிருந்த போது, இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (30) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரபாகரன் கல்லால் ராஜமாணிக்கத்தை தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதையடுத்து, பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments