பழனியில் ஒருவா் கொலை
பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பழனி புறவழிச் சாலை நாகூா் பிரிவு அருகே பழைய நெகிழி கிட்டங்கி நடத்தி வருபவா் ரமேஷ்குமாா் (40). இவரது கிட்டங்கிக்கு அருகிலேயே மற்றொரு கிட்டங்கி நடத்தி வருபவா் செந்தில்குமாா் (40). இருவரும் உறவினா்கள்.
இருவரும் ஒன்றாகத் தொழில் செய்து வந்த நிலையில், தற்போது பிரிந்து தனித்தனியே தொழில் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக புதன்கிழமை இரவு கிட்டங்கியில் தனியே இருந்த ரமேஷ்குமாரை செந்தில்குமாா் கோடாலியால் வெட்டினாா். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ்குமாா் உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்து பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கொலை குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.