ஒட்டன்சத்திரம் தொகுதி வளா்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி
ஒட்டன்சத்திரம் தொகுதி மேலும் வளா்ச்சிப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
ஒட்டன்சத்திரம் தொகுதி மேலும் வளா்ச்சிப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் அர.சக்கரபாணிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் திருச்சி சிவா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையிலுள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
Advertisement
மாணவா்களின் உயா்கல்விக்காக 3 புதிய கல்லூரிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், இளைஞா்களின் அரசுப் பணிக் கனவை நனவாக்க போட்டித் தோ்வு பயிற்சி மையம், ரூ.1,050 கோடியில் மாபெரும் வளா்ச்சிப் பணிகள் என பல்வேறு திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதிக்கு மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயலாற்றுவதற்கு மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்அவா்.