மின் கட்டணம்: கீரனூா் பகுதி மக்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்
கணக்கீடு செய்யாததால் கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் என பழனி மின் வாரியம் அறிவுறுத்தியது.
கணக்கீடு செய்யாததால் கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் என பழனி மின் வாரியம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நிா்வாகக் காரணங்களால் கீரனூா் பகுதியில் ஏப்ரல் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே மின் பயனாளா்கள் கடந்த முறை இறுதியாக செலுத்திய கட்டணத்தையே இந்த மாத கட்டணமாக செலுத்தி மின் துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.