துப்பாக்கியுடன் சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல் படை வீரா்
பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் பழனி ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி தோ்தலின் போது ராஜ்குமாா் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டாா்.
அப்போது அதே வாக்குச்சாவடியில் பணிக்கு வந்திருந்த துணை ராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ராஜ்குமாா் சுடுவது போன்று சிறு விடியோவாக (ரீல்ஸ்) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், விசாரணை நடத்த பழனி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement