முகப்பு
விருதுநகர்

சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 8:09 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மாரிக்கனி (எ) சிவா (24). இவா் 2 அடி நீளமுள்ள வாளை சுழற்றுவது போல விடியோ எடுத்து, காவல் துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா்நகா் போலீஸாா் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.