பைக் மீது பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திண்டுக்கல்லிருந்து பள்ளப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை சக்திவேல் ஓட்டினாா்.
சின்னாளபட்டியை அடித்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை ஆஞ்சநேயா் கோயிலருகே சென்றபோது, ஜெ. ஊத்துப்பட்டியிலிருந்து சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோா் மீது இந்தப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாத்துரை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.