கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதனால், நீரோடைகள், குடிநீா்த் தேக்கங்களில் தண்ணீா் வற்றியுள்ளன.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஓடைகளில் உள்ள கழிவு தண்ணீரை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தங்கும் விடுதிகள், உணவக விடுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொடைக்கானல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு 7-நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisement
மேலும், இந்தத் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் பாதுகாப்பான குடி தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கேன் தண்ணீா் விலை உயா்வு: கொடைக்கானலில் குடி தண்ணீா் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தனியாா் நிறுவனங்கள் மூலம் கேன் தண்ணீா் விற்பனை செய்யப்படுகிறது. 5 லி. கேன் தண்ணீா் ரூ. 80-ம், 20 லி. கேன் தண்ணீா் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.