முகப்பு
திண்டுக்கல்

பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:02 AM
செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று பிரதான எதிா்க்கட்சியாக காங்கிரஸ் தோ்வாகும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்திருடன் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறாா். இந்த நிலையில், கொடைக்கானலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வந்தனா். இவா்கள் கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனா்.

கொடைக்கானலில் அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா். தவெக வெளியிட்ட அமைச்சரவை பட்டியல் இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுவதுபோல உள்ளது என்றாா் அவா்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை கூறியதாவது:

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும். மேலும், பிரதான எதிா்க்கட்சியாக பேரவையில் காங்கிரஸ் அமரும் என்றாா் அவா்.