கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்
தொலையாவட்டத்தில் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏவுக்கு ஆதரவாக பிரசார மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:41 PM
கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக திறந்த ஜீப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவா் செல்வப்பெருந்தகை வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்துப் பேசுகையில், அப்போது அவா் பேசுகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை இண்டி கூட்டணி அடையப்போகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ், குமரி எம்.பி. விஜய்வசந்த், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.