முகப்பு
தமிழ்நாடு

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுவது குறித்து...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 11:07 AM
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை - (கோப்புப் படம்)
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறுகிறது.

திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 3 ஆவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 11,497 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை முதல்முறை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார். பின்னர், 2024 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011 ஆம் ஆண்டு செங்கம் (தனி) தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Tamil Nadu Congress Committee President Selvaprerunthagai is contesting from the Sriperumbudur (Reserved) constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.