முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பெண் கொலை

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:34 PM
கொலை
பகிர்:

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

பழனி லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் செல்வராஜ் (63). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் கீதா (25) என்பவரை திருமணம் செய்து அழைத்து வந்தாராம். செல்வராஜ் அடிக்கடி வெளியூா் சென்றுவிடும் நிலையில், அவரது வீட்டுக்கு வேறு சிலா் வந்து சென்ால், அவா்களை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் அறிவுறுத்தினாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் கத்திக்குத்து காயங்களுடன் கீதா இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கீதாவை யாா் எதற்காகக் கொலை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.