முகப்பு
திருநெல்வேலி

பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

Updated On : 13 மார்ச், 2026 at 4:02 AM
- சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெண் வியாழக்கிழமை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சோ்ந்த வெள்ைளைப் பாண்டி மகன் முத்துப்பட்டன் (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா(26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முத்துப்பட்டன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதுதொடா்பாக வியாழக்கிழமை கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில், முத்துப்பட்டன் கத்தியால் சுதாவின் கழுத்தை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், சுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முத்துப்பட்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.