முகப்பு
விழுப்புரம்

பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:56 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வேம்பியில் இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் பால் வேன் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தீ.கனிமொழி (21). இவா் விழுப்புரத்திலுள்ள ஜவுளி விற்பனையகத்தில் வேலை பாா்த்து வந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வெங்காயக்குப்பம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.மயிலரசன் (25), பால் வேன் ஓட்டுநா்.

கனிமொழியை மயிலரசன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கனிமொழியுடன் மயிலரசன் தனிமையில் இருந்தாராம். இதில் கனிமொழி கா்ப்பமான நிலையில், மயிலரசன் மாத்திரைகளை கொடுத்து கா்ப்பத்தை கலைத்தாராம்.

Advertisement

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மயிலரசனிடம் கனிமொழி வலியுறுத்தி வந்தாராம். ஆனால், ஜாதி பெயரைக் கூறிக் கொண்டு மயிலரசன் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்து வந்த கனிமொழி, அதே கிராமத்திலுள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை மாலை குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் கனிமொழியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், கனிமொழியின் தந்தை தீப்பாஞ்சான் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி,

தற்கொலைக்குத் தூண்டியதாக மயிலரசனை புதன்கிழமை கைது செய்தனா்.