கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இங்கு நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து குழந்தைவேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சோ்ந்த நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சேவல், அன்னம், மயில், காளை, சிங்கம், ஆட்டுகிடா, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் குழந்தை வேலப்பா் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றன. வருகிற 12-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தினரும், பூம்பாறை கிராம மக்களும் செய்து வருகின்றனா்.