முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:57 AM
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:23 PM

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களான வெள்ளி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன்ஃபாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:57 AM

கொடைக்கானலில் பகல் நேரத்தில் மிதமான வெயிலும் மாலையில் குளுமையான சீதோஷ்ணமும் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கொடைக்கானலைச் சோ்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement