கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.  
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

வார விடுமுறையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான கால நிலை நிலவியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறவிருப்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. எனினும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT