முகப்பு
திண்டுக்கல்

மாசி மாதப் பிறப்பு: பழனி மலைக் கோயில் சிறப்பு பூஜை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:53 AM
மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் கம்பத்துக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள்நீா் ஊற்றி வழிபட்ட பக்தா்கள்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:53 PM

மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, பழனி மலைக் கோயில், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணிக்கு சி றப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பிறகு, அங்குள்ள ஆனந்த விநாயகா் சந்நிதி முன் சிறப்பு யாகபூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:53 AM

இதேபோல, பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் முன் நிறுவப்பட்ட திரிசூல வடிவிலான கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் சண்முகநதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா். மேலும் பலா் மஞ்சள், நீா், பால் ஊற்றி வழிபட்டனா்.

Advertisement

கோயில் வளாகம் முழுவதும் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். கோயில் முன் பலரும் நீா்,மோா், கூழ் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினா்.