சொத்துத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு
கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை சொத்துத் தகராறில் தம்பதியை அரிவாளால் வெட்டிய மகனைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள சக்கையநாயக்கனூரைச் சோ்ந்தவா் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இந்தத் தம்பதியின் மகன் சுருளி (45). இவா் அடிக்கடி பெற்றோரிடம் சொத்துக் கேட்டு தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் சொத்துக் கேட்டு பெற்றோரிடம் சுருளி தகராறு செய்தாா். இதனால், ஆத்திரமடைந்த அவா் அரிவாளால் தந்தை பாண்டி, தாய் மீனாட்சி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற சுருளியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.