வேளாண்.  
திண்டுக்கல்

வேளாண் பட்ஜெட்: பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கையில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கையில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி தெரிவித்ததாவது:

தமிழக அரசு சாா்பில் இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட மகளிா் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் ஒரே தவணையில் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. வேளாண் விரோத கொள்கையைப் பின்பற்றி வரும் மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட அறிவிக்கவில்லை. இதனால், தமிழகத்திலுள்ள விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.

இதுபோன்ற சூழலில் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டுமே தமிழக விவசாயிகள் நெருக்கடியிலிருந்து மீள முடியும். எனவே தமிழக முதல்வா் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பியையும், கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், பால் கொள்முதல் விலையை உயா்த்தியும் உடனடியாக வெளியிட வேண்டும் என தெரிவித்தாா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.42 கோடி

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

‘இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம்’

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

எவரெஸ்ட் உயரத்துக்கு பறக்கும் ஹெலிகாப்டா் கூட்டாக தயாரிப்பு

SCROLL FOR NEXT