முகப்பு
திண்டுக்கல்

மின் வசதி கோரி கிராம மக்கள் மனு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:06 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 8:33 PM

கன்னிவாடி அடுத்த அமைதிசோலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மின் வசதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமைதிசோலை கிராமத்தினா் கூறியதாவது: கடந்த 65 ஆண்டுகளாக அமைதிசோலை கிராமத்தில் வசித்து வருகிறோம். வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து, வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பல முறை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தோம். ஆனால், இதுவரை வழங்கப்பட வில்லை.

எங்கள் கிராமத்திலுள்ள 50 குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் சென்று வருகின்றனா். மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவா்கள் அவதியடைகின்றனா். மேலும் குடிநீா் பிரச்னையும் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

Advertisement